தேங்காய் பூரண பூரி
தேவையானவை
- ரவை - கால் கப்
- கோதுமை மாவு (அ) மைதா மாவு - ஒரு கப்
- சர்க்கரை - அரை கப்
- தேங்காய் துருவல் - அரை கப்
- எண்ணெய் - பொரிப்பதற்கு.
செய்முறை :
Step 1.
முதலில் தேங்காய், ரவை, சர்க்கரை மூன்றையும் பிசறி 10 நிமிடம் ஊறவிடவும். கோதுமை மாவை நீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
Step 2.
பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிறகு ஒரு சிறிய உருண்டையை எடுத்து, குழி போல செய்து அதில் தேங்காய், ரவை, சர்க்கரை கலவையை வைத்து மூடி விடவும்.
Step 3.
இதை சிறிய மெல்லிய பூரிகளாக இட்டு, காயும் எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

Comments
Post a Comment