சில்லி சப்பாத்தி
தேவையானவை
- சப்பாத்தி – 4 பெரிய
- வெங்காயம் – 2
- தக்காளி – 1
- பச்சை மிளகாய் – 1
- தக்காளி சாஸ் – 2 மேஜைக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- சிவப்பு புட் கலர் – சிறிது
- கொத்தமல்லித்தழை – சிறிது
- உப்பு – சிறிது
- எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
செய்முறை :
Step 1.
முதலில் சப்பாத்தி, தக்காளி, வெங்காயம் மூன்றையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்
Step 2.
புட் கலரை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
Step 3.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தக்காளி சாஸ், கரைத்து வைத்துள்ள கலர் தண்ணீர் எல்லாவற்றயும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
Step 4.
பிறகு அதனுடன் சப்பாத்தி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறுதியில் கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான சில்லி சப்பாத்தி ரெடி. மீந்து போன சப்பாத்தியை இவ்வாறு செய்து சுவையாக சாப்பிடலாம்.

Comments
Post a Comment